பதிவு செய்த நாள்
16ஏப்2015
13:56
திருவள்ளூர்: சென்னையை அடுத்த திருவள்ளூரில் நடந்த தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில்,'தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது. இது நேர்மையான அரசாக இருந்தால், இடைவிடாத மின்சாரத்தை வழங்க வேண்டும். ஆனால், இந்த அரசு சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.மது, ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 6000 மெகாவாட் மின்சாரத்தை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மத்திய அதிகாரிகள் குழு தமிழகம் வர உள்ளது,' என்றார்.
Advertisement
No comments:
Post a Comment